சக இனத்துக்கான விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தேவேந்திரரர்கள் மௌனம் காக்கலாமா?

16195184_1879809998969558_8921423920322581966_nசக இனத்துக்கான விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனக்கான அங்கீகாரத்தை எந்த ஒரு இனமோ/சாதியோ அடைந்ததாக வரலாறு இல்லை..பகுஜன் சமாஜ்வாதியும்,கமியூனிஸ்ட்டுகளும் மட்டுமே கொடுமைகளை எதிர்த்து போராட வேண்டுமா?”அநியாயங்களைகண்டும் காணாமல் போனாயே ஆனால் நாளை உனக்கும் இதே நிலைதான்”.. 

 

மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை.
இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன்.

இந்நிலையில் நந்தினியை உடல்தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்த இவன், கருத்தரித்ததை வைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய அவள் பிரச்சனையை அவனது பாணியிலேயே முடிக்க விரும்பினான்.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை சந்தித்து பேசி ஆலோசனை செய்தபின்பே நந்தினியை இவன் நன்பர்களோடு சேர்ந்துப்படி கடத்திச் சென்றதாக நந்தினி தரப்பில் அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.

கடத்தப்பட்ட நந்தினியை மறைவிடத்தில் அடைத்து வைத்த மணிகண்டன் அவனது நன்பர்களான கீழமாளிகை திருமுருகன் (த/பெ அறிவழகன்), அயன்தத்தனூர் வெற்றிச் செல்வன் (த/பெ சீனிவாசன் ), மணிவண்ணன் (த/பெ செல்வராஜ்) ஆகியோருடன் நால்வராக இணைந்து நான்கு நாட்கள் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். அதன் பின்னர் நடந்தது கொடுமைகளின் உச்சம்..

நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.
பின்னர் நிர்வாணமான நிலையிலேயே கொடுமை தாளாமல் இறந்துபோனாள்….

#இந்து_முன்னணி

அரியலூர் தலித்பெண் நந்தினியின் கோரப்படுகொலை !

டெல்லிப்பெண் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரத்தில் கொஞ்சமும் குறையாதது இந்த கொடூரப்படுகொலை.

வன்கொடுமை,கூட்டு பாலியல் வல்லுறவு, கோரக்கொலை என அனைத்து கொடூரங்களையும் கொலையாளிகள் செய்துள்ளனர்.

ஊடகங்கள் அதிகம் பேசாத,கண்டுகொள்ளாத இந்த கொடூரச்செயலை வெகுமக்களின் பார்வைக்கு வெளிகொணர வேண்டும்.

உண்மையை வெளிக்கொண்டுவருவதும்,நிகழ்ந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்கவும்,குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கச்செய்வதும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரின் கடைமையும் ஆகும்.

‘உண்மையில் அரியலூர் நந்தினிக்கு என்ன நடந்தது ?’

அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ராஜகிரி ஆகியோரின் மகள் நந்தினி (16). இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். குடும்பச் சூழல் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு செந்துரையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நந்தினிக்கும் கீழமாளிகை வடக்கு தெருவில் வசிக்கும் ராமசாமியின் மகனும் இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளருமான மணிகண்டன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

செந்துரை பகுதியில் கடந்த ஆண்டு மணிகண்டன் கொத்தனார் வேலை செய்துவந்தபோதுதான் நந்தினிக்கும் மணிகண்டனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் நந்தினி கருவுற்றிருக்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை.
இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன்.
பொதுக்கூடங்களில் புகுந்து கலவரம் செய்த வழக்கெல்லாம் இவன் மீது உண்டு.
இந்நிலையில் நந்தினியை உடல்தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்த இவன், கருத்தரித்ததை வைத்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அவள் பிரச்சனையை அவனது பாணியிலேயே முடிக்க விரும்பினான்.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை சந்தித்து பேசி ஆலோசனை செய்தபின்பே நந்தினியை இவன் நன்பர்களோடு சேர்ந்துப்படி கடத்திச் சென்றதாக நந்தினி தரப்பில் அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.

கடத்தப்பட்ட நந்தினியை மறைவிடத்தில் அடைத்து வைத்த மணிகண்டன் அவனது நன்பர்களான கீழமாளிகை திருமுருகன் (த/பெ அறிவழகன்), அயன்தத்தனூர் வெற்றிச் செல்வன் (த/பெ சீனிவாசன் ), மணிவண்ணன் (த/பெ செல்வராஜ்) ஆகியோருடன் நால்வராக இணைந்து நான்கு நாட்கள் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். அதன் பின்னர் நடந்தது கொடுமைகளின் உச்சம்.. நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.
பின்னர் நிர்வாணமான நிலையிலேயே கொடுமை தாளாமல் இறந்துபோன நந்தினியின் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் போட்டுள்ளனர்.
————————————————————-
‘புகாரை மாற்றச் சொன்ன காவல்துறை’

இந்நிலையில் தனது மகளை கீழமாளிகை மணிகண்டன் கடத்தி சென்றுள்ளார் என்று செந்துரை காவல் நிலையத்தில் டிச. 30 ஆம்தேதி அன்று ராஜகிரி புகார் கொடுத்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட எஸ்.ஐ. ராஜேந்திரன், மணிகண்டனால் கடத்தப்பட்டதாக புகாரளித்தால் எடுத்து கொள்ளமுடியாது எனவும், நந்தினியை காணவில்லை என மாற்றி புகார் கொடுத்தால்தான் புகாரை ஏற்றுக்கொண்டு, உனது மகளை தேடி தருவோம் என்று கூறி புகாரை மாற்றிவாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்.

இதனால் நந்தினியின் உறவினர்கள் தினமும் காவல்நிலையத்திற்குச் சென்று நந்தினி கிடைத்துவிட்டாளா என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு காவல்துறையினர் தாங்கள் தேடிக் கொண்டு இருப்பதாக தொடர்ர்து கூறியுள்ளனர்.

கடந்த ஜன.14 சனிக்கிழமையன்று கீழமாளிகை அருகே உள்ள ஒரு கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்றுபார்த்தபோது, அங்கே நிர்வாண நிலையில் அழுகிய பிணமாக நந்தினி கண்டெடுக்கப்பட்டாள். உடனே தீயணைப்புப் படையினர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு நந்தினியின் தாயார் வரவழைக்கப்பட்டு, இது நந்தினியின் உடல்தான் என அவரும் அடையாளம் காட்டியுள்ளார்.

——————————————————–
‘மறியல் போராட்டம்’

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து மருத்துவமனை முன்பு கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பதட்டமான சூழல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக் கிழமையன்றே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. ஆயினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் குற்றவாளிகள் கைதை வலியுறுத்தி ஞாயிறன்றும் போராட்டம் தொடர்ந்தது. கைது செய்யாமல் உடலை வாங்கமாட்டோம் எனக் போராட்டக்குழுவினர் கூறிவிட்டனர்.

அதன்பின், அரியலூர் டி.எஸ்.பி. செந்துரை தாசில்தார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து நந்தினியை பலாத்காரம் செய்து கொலை செய்த மணிகண்டன், மணிவண்ணன், திருமுருகன், வெற்றிச்செல்வன் ஆகியோரை மட்டும் கைது செய்துள்ளனர்.
ஆயினும் இந்த கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்துமுன்னணியின் மாவட்டச் செயலாளர் ராஜசேகர் கைது செய்யப்படாததால் அவரை கைது செய்யக்கோரி அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாயன்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கோட்டாட்சியர், அரியலூர் டிஎஸ்பி மற்றும் அரசு அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், நந்தினியின் கொலைக்கு காரணமான இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் ராஜசேகரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். நந்தினியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பதான கோரிக்கைகளோடு போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் நந்தியின் குடும்பத்தினரை உண்மை அறியும் குழுவினர் சந்தித்து விசாரித்தறிந்தனர். அக்குழுவில் எவிடன்ஸ்கதிர்,காஞ்சிமக்கள் மன்றம் தோழர் மகேசு,திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.பா.சிவா ஆகியோர் உள்ளிட்ட தோழர்கள் இடம்பெற்றிருந்தனர். அக்குழுவினரிடம் நந்தினி குடும்பத்தினர்,”தாங்களும் இப்போது பாதுகாப்பற்ற சூழலில் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூரச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். காவல்துறையும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 23.01.2017 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையை வலியுறுத்தி குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் அதிகமான தோழர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

16142334_1879810005636224_5615967084174543561_n

தமிழச்சி (Tamizachi)

and திராவிடர் விடுதலைக் கழகம்